சீரற்ற வானிலை : மாத்தறை மாவட்டத்தின் பாடசாலைகளுக்கு விடுமுறை!
#SriLanka
#School
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 07 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தின் பாடசாலைகளுக்கு இன்று (05.10) நாளையும் (06.10) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.