ஊரிப்பிட்டி இந்துமயானத்தின் புதிய பெயர்ப்பலகை திறப்பு விழா!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஊரிப்பிட்டி இந்துமயானத்தின் புதிய பெயர்ப்பலகை திறப்பு விழாவும் மரநடுகையும் நேற்றைய (04.10) தினம் தலைவர் சிவஞானசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது.
காலை 9.00 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் சாவகச்சேரி பிரதேசசபையின் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ,ஆசிரியர் சுதேஸ்கரன் , மட்டுவில் வடக்கு கிராம உத்தியோகத்தர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மயான அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் ,பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதேசசபைச் செயலாளர் சந்திரகுமார் மற்றும் ஆசிரியர் சுதேஸ்கரன் ஆகியோர் பெயர்ப்பலகையைத் திரைநீக்கம் செய்துவைத்தனர். தொடர்ந்து மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.



