நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

#SriLanka #Mahinda Amaraweera #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இலங்கையில் தாமதமாக ஏற்பட்ட திடீர் மற்றும் தீவிர காலநிலை காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.  

அமைச்சின் வளாகத்தில் இன்று (04.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்படி தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  முன்னர் எதிர்கொண்ட வறட்சியான காலநிலை காரணமாக கிட்டத்தட்ட 70,000 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். 

சமீபத்தில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும் நாசமாகியதுடன், கனமழை காரணமாக  அம்பாந்தோட்டையில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 15,000 ஏக்கர் வெண்டைக்காய் அழிக்கப்பட்டதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். 

இதனால், நாட்டிற்குள் உணவுப் பற்றாக்குறை ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,  தோட்டங்களில் மரக்கறி பயிர்களை வளர்ப்பதை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்வரும் காலங்களில் அறுவடையை அதிகப்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!