நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம்!
#SriLanka
#Jaffna
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழ்த் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் யாழ் கொக்குவில் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் ஒன்று இன்று (04.10) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா முன்னாள் மாகாண சபை மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசியல் தரப்பினர் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.



