தேசிய சுனாமி பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி இன்று!

தேசிய சுனாமி பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி இன்று (04.10) நடைபெற உள்ளது.
திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களை முதன்மையாகக் கொண்டு காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, “2004ல் சுனாமிக்குப் பிறகு, இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீண்டும் இதுபோன்ற பேரழிவு ஏற்பட்டால், இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்த அபாயத் தகவல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நாடுகள் தயாரித்த நடைமுறைகளின்படி, ஆபத்தில் உள்ள மக்களை வெளியேற்றும் செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது. யுனெஸ்கோவுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியப் பெருங்கடல் முன்னெச்சரிக்கை திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சுனாமி அபாயம் குறித்த விழிப்புணர்வும், வெளியேற்ற ஒத்திகையும் மேற்கொள்ளப்படும்” எனக் கூறினார்.



