தளம்பல் நிலையில் உள்ள இலங்கையின் பொருளாதாரம் : எச்சரிக்கை விடுத்த உலக வங்கி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #World Bank
Dhushanthini K
1 year ago
தளம்பல் நிலையில் உள்ள இலங்கையின் பொருளாதாரம் : எச்சரிக்கை விடுத்த உலக வங்கி!

உலக வங்கி நேற்றைய (03.10) தினம்  இலங்கையின் பொருளாதாரத்திற்கான முன்னறிவிப்புகளை திருத்தியுள்ளது. 

இதன்படி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடு பணவீக்கத்தை குறைப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், சுற்றுலா வருவாய் மற்றும் அதன் நாணயத்தின் மதிப்பீட்டின் மூலம் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  

உலக வங்கியானது  அடுத்த ஆண்டில் (2024) பொருளாதாரம் 1.7% விரிவடையும் என்று எதிர்பார்க்கிறது, இதற்கிடையே இலங்கையின் பொருளாதாரமானது இந்த ஆண்டில் 3.8 வீதம் சுருங்குவதற்கு வாய்ப்புள்ளது. 

கடந்த ஆறு மாதங்களில், இலங்கையின் பணவீக்கம் செப்டம்பரில் 1.3% ஆகக் குறைந்துள்ளது,  ஆனால், இலங்கையின் கண்ணோட்டம் இன்னும் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையினால் மங்கலாக இருப்பதாகவும், பாதகமான அபாயங்கள் இருப்பதாகவும் உலக வங்கி எச்சரித்துள்ளது. 

"வளர்ச்சி வாய்ப்புகள் கடன் மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை தொடர்ந்து செயல்படுத்துவதைப் பொறுத்து ஒரு தளம்பல் நிலையில் இருப்பதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் பணவியல் தளர்வு மற்றும் சாத்தியமான மாற்று விகித அழுத்தங்களை நாங்கள் காண்கிறோம் எனவும் இது இந்த கீழ்நோக்கிய பணவீக்கப் போக்கை எதிர்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். 

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்புப் பொதிக்கான உடன்படிக்கையை இலங்கை மார்ச் மாதம் செய்துகொண்டது, ஆனால் அரசாங்க வருவாயில் ஏற்படக்கூடிய பற்றாக்குறையினால் பொதியிலிருந்து இரண்டாவது தவணை நிதியை பெற்றுக்கொள்வது  தாமதமாகலாம் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!