பேருவளையில் இரு பேருந்துகள் மோதி விபத்து : 06 பேர் காயம்!
#SriLanka
#Accident
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பேருவளையில் இரண்டு பேரூந்துகள் மோதி விபத்திற்குள்ளானதில், 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி-கொழும்பு குளிரூட்டப்பட்ட பேருந்து ஒன்றும் கதிர்காமத்துக்கும் கொழும்புக்கும் இடையில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது. .
காயமடைந்தவர்கள் பேருவளை பிரதேச வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்டு களுத்துறை பொது வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



