இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கிடங்கு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பான கடிதம் இன்று (04.10) மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
14 மாதங்களுக்கு முன்னர் மிகவும் சவாலான காலக்கட்டத்தில் பதவியை ஏற்ற நிலையில், அவருடைய சேவைக்கு அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது நன்றியை Xஇல் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனதுபதவியை இராஜினாமா செய்துள்ளதாகவும் அமைச்சர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



