துவாரகாவின் பெயரை கூறி விடுதலைப்புலிகளுக்காக என கூறி சேர்த்த பணம் அனைத்துக்கும் ஆப்பு வைத்த அப்துல்லா

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான தற்பொழுது சுவிஸில் உள்ள அப்துல்லா என்பவர் விடுதலைப் புலிகளுக்காக சேர்த்த பணம் அனைத்தையும் அவரே எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்காக கடன் வாங்கி கொடுத்த பணம் அனைத்தையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் நிதிப் பொறுப்பாளராக இருந்த அப்துல்லா என்பவர் அவரே அனைத்து பணத்தினையும் கையாகப்படுத்தியுள்ள நிலையில் பணத்தினை கொடுத்தவர்கள் தற்பொழுது பனத்தினை இழந்து கவலையில் உள்ளனர்.
இவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தை பராமரிப்பதாக பொய் கூறி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
ஆனால் அனைத்து பணத்தினையும் அவரே செலவு செய்துவிட்டு, விடுதலைப் புலிகளின் தலைவரது குடும்பத்தினர் தற்பொழுது உயிரோடு இல்லாத காரணத்தினால், அவர்கள் இருப்பதாக பொய் கூறி அவர்களிடம் பணம் அனைத்தையும் கொடுத்து விட்டதாகவும் கூறி வருகின்றார்.
இந்த நிலையில் துவாரகா தன்மீது அவதூறான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்மைக் காலங்களாக விடுதலைப் புலிகளின் தலைவரின் மகள் துவாரகா மற்றும் மனைவி பிள்ளைகள் உயிரோடு இருப்பதாக பொய்யான வதந்திகளை அப்துல்லா தலைமையிலான ஒரு சிலரே அறிக்கை மூலம் வெளியிடுவதாகவும், ஊடகங்களை அதன்பால் திசை திருப்பி விட்டு சேர்த்த பணம் அனைத்தையும் தாங்களே கையகப்படுத்துவதற்காக திட்டமிட்டு இவ்வாறான அறிக்கைகைகளை அவர்களே வெளியிடுவதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான பொய்யான வதந்திகளை நம்பி பணத்தினை கொடுக்க வேண்டாம் எனவும் இவ்வாறான அறிக்கைகள் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



