கோவிலில் பூசாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒஸ்பன் தோட்டத்திலுள்ள இந்து ஆலயத்தின் உதவிப் பூசகராகப் பணியாற்றிய 16 வயதுடைய இளைஞன் கோவிலுக்குச் சொந்தமான தற்காலிக கொட்டகையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒஸ்பன் தோட்டத்தின் கீழ் பகுதியில் வசித்து வந்த சுந்தரமுள்ளன் ஜனநாதன் என்ற 16 வயது இளைஞனே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஒஸ்பன் தோட்டத்திலுள்ள இந்து ஆலயத்தின் பிரதான பூசாரியுடன் தற்கொலை செய்து கொண்ட உதவி இந்து மதகுரு சில காலமாக இந்து ஆலய வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று காலை வேளையில் பிரதம குரு கோவிலில் இல்லாத வேளை, தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த கொட்டகையின் மின்கம்பத்தில் உதவி அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து கோவிலுக்கு வந்த பிரதம குரு, நடந்ததை பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.



