யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு நீதி கோரி போராட்டம்!

#SriLanka #Protest #Mullaitivu #Judge #Juctice
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணத்தில் நீதிபதிக்கு நீதி கோரி போராட்டம்!

யாழ். மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இன்றையதினம் (03) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு நீதிபதிக்கு நீதி கோரி பேரணி ஒன்றிலும் ஈடுபட்டனர்.

 முல்லைதீவு நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக பதவியில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள நிலையில், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 நீதிபதிக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பாரபட்சமற்ற உரிய சுயாதீன விசாரணை செய்யப்பட வேண்டும், எச்சந்தர்ப்பத்துலும் நீதித்துறை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள் வலியுறுத்தினர்.

images/content-image/2023/10/1696328107.jpg

images/content-image/2023/10/1696328093.jpg

images/content-image/2023/10/1696328073.jpg

images/content-image/2023/10/1696328048.jpg

images/content-image/2023/10/1696328030.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4