இலங்கை ஒருபோதும் சர்வதேச விசாரணைக்கு செல்லாது: ஜனாதிபதி அதிரடி
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Mayoorikka
1 year ago

இலங்கை அரசாங்கம் ஒருபோதும் சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்க மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் இனவழிப்பு, மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான எந்தவொரு பிரச்சினைகளுக்கும் இலங்கை சர்வதேச விசாரணைக்கு செல்லாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை நிராகரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.



