பொலிஸ் உத்தியோகத்தர் போல் நடித்த கொள்ளைக் கும்பல் கைது

பொலிஸ் உத்தியோகத்தர் போல் காட்டிக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் மாவத்தகம பொலிஸாரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 38 வயதான நிகடலுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவரை மாவத்தகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சந்தேக நபருடன் பயணித்த மற்றுமொரு நபர் மாவத்தகம பொலிஸ் பிரிவில் 207,000 ரூபா கொள்ளையில் ஈடுபட்டுள்ளதுடன் குறித்த நபரும் இன்று மாவத்தகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
"இந்த சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள் திருட்டுகளில் ஈடுபடுபவர்கள். பணக் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்காக அவருக்கு கிட்டத்தட்ட 6 பிடியாணைகள் உள்ளன.
இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக குருநாகல், புத்தளம், மாரவில போன்ற நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு குற்றங்கள் உள்ளன. பயணம் செய்யும் போது இந்த சந்தேக நபர் சூதாட்ட இடங்களுக்குச் சென்று பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து அந்த இடங்களில் மக்களை கொள்ளையடித்துள்ளதாக தெரிவித்தார்.



