சீதா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் மூன்று தரப்பினர் விசாரணை
#SriLanka
#Investigation
#Elephant
#GunShoot
Prathees
2 years ago
மஹியங்கனை எசல பெரஹெராவில் கலந்துகொண்ட யானை சீதா அத்தன்னவை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பில் மூன்று தரப்பினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, சுடப்பட்ட சீதா அத்தன்னவின் உடல்நிலை இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை என பேராதனைப் பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத் தலைவர் பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.