வென்னப்புவ பகுதியில் குளவிக் கொட்டு சம்பவம் : 26 பேர் பாதிப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#news
Dhushanthini K
1 year ago

வென்னப்புவ - மார்ட்டின் பகுதியில் குளவி கொட்டுச் சம்பவம் ஒன்று இன்று (02.10) பதிவாகியுள்ளது.
வனக்கல்லூரியின், அதிபர் உள்ளிட்ட 26 மாணவர்களே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். காயமடைந்த அனைவரும் லுனுவில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக சிகிச்சைக்காக அதிபர், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் நான்கு பிள்ளைகள் மாரவில ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கு அருகில் உள்ள தோட்டத்தில் குளவி கூடு திடீரென கிளறி குளவி தாக்கியதாக தெரியவந்துள்ளது.



