முதலீடுகளை ஈர்ப்பது குறித்து அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை!

நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பின் போது இருதரப்பு வர்த்தகம் மற்றும் இரு நாடுகளின் பொருளாதார விவகாரங்கள் குறித்து இருநாட்டு பிரதிநிதிகளும்விவாதித்துள்ளதாக அறிய முடிகிறது.
கலந்துரையாடலின் போது, சுற்றுலா, விவசாயம், மீன்பிடி மற்றும் சுரங்கம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை குறித்து ஆராயப்பட்டுள்ளது.
ஏற்றுமதி சந்தைகள் மற்றும் தயாரிப்புகளை பல்வகைப்படுத்துவதற்கான சான்றிதழ்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மற்றும் சந்தை அணுகல் வாய்ப்புகள் தொடர்பாகவும், சந்தை அணுகலில் உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்வது குறித்தும் இலங்கை அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.



