இலங்கை விமான நிலையத்தில் அவதிக்குள்ளான மக்கள்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் இரத்துச் செய்யப்பட்ட நிலையில் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேபாளத்தின் காத்மாண்டு மற்றும் இந்தியாவின் மும்பைக்கு புறப்படவிருந்த இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பயணிகளை ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.