சீதா மீது 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது: பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு கோரிக்கை

#SriLanka #Investigation #Elephant
Prathees
2 years ago
சீதா மீது 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது: பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு கோரிக்கை

மஹியங்கனை ரஜமஹா விகாரையில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட சீதாவை சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விகாரையின் தலைவர் உருளாவத்த தம்மரக்கத்தி தேரர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 எந்தவித விசாரணையும் இன்றி அந்த இடத்தில் 6 துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 சீதா அத்தன்னவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் தமக்கு சந்தேகம் இருப்பதாக மேற்படி அத்தன்னவின் உரிமையாளர் எஸ்.என்.ரொஷான் தெரிவித்தார்.

 இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என அடக்க யானைகள் உரிமையாளர்கள் அமைப்பின் செயலாளர் தம்சிறி பண்டார தெரிவித்துள்ளார்.

 மஹியங்கனை ரஜமஹா விகாரை ஊர்வலத்தில் கலந்து கொண்ட சீதா, ஊர்வலம் முடிந்து, கோவிலுக்கு அருகாமையில் கட்டப்பட்டிருந்த போது சுடப்பட்டார்.

 துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சந்தேகநபர் 1000 ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு அக்டோபர் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!