கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களை இணைத்து சுற்றுலா வலயமொன்று உருவாக்க திட்டம்

கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களை இணைத்து சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவதற்கு வெளிவிவகார அமைச்சு செயற்பட்டு வருவதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புராதன இடங்கள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் பிற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை உள்ளடக்கிய வகையில் இந்தத் திட்டங்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்தப் பகுதிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க, கேகாலை மாவட்ட செயலாளர் ரஞ்சனா ஜயசிங்க, கேகாலை மற்றும் கண்டி மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர்கள், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, கங்கை மேல் கோரள கரோல, பஸ்பாகே, பிரதேச செயலாளர்கள். மற்றும் கள அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்



