லியான்வல பிரதேசத்தில் நீரில் மூழ்கிய இளைஞர் மாயம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பாதுக்க லியான்வல பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
ஹல்கடவத்தை பிரதேசத்தின் ஊடாக பாயும் பூசாலி ஓயாவில் குதித்து நீராட முயற்சித்த நிலையில், குறித்த இளைஞர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன இளைஞனின் சடலத்தை தேடும் நடவடிக்கையை பொலிஸ் கடற்படை பிரிவினர் மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



