பிலடெல்பியாவில் தொடரும் கொள்ளையர்களின் கைவரிசை : 20 பேர் கைது!
#world_news
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுக்கூடி கடை ஒன்றில் இருந்து கொள்ளையடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
குறித்த கொள்ளையவர்கள் தொலைபேசி, மின்னணு உபகரண கடைகள், மதுபான கடைகள் உள்ளிட்ட பல கடைகளை சூறையாடி உள்ளனர்.
இந்நிலையில் பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.