கசிப்பு உற்பத்தியின் பெறுமதி குறித்து விளக்கும் டயானா கமகே

#SriLanka #Diana Gamage
Prathees
1 year ago
கசிப்பு உற்பத்தியின் பெறுமதி குறித்து விளக்கும்  டயானா கமகே

3600 ரூபாவிற்கு மதுபான போத்தல் ஒன்றை கொள்வனவு செய்ய பொது மக்கள் முடியாத காரணத்தினால் மாற்று வழியை அறிமுகப்படுத்த வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். 

 மேலும், மதுபானத்தின் விலை உயர்வால் கசிப்பு உற்பத்தி 500% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

 தற்போது பலர் வீட்டில் காசிப்புவை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 கசிப்பு மற்றும் கஞ்சாவின் மதிப்பை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்றும், ரஷ்யாவில் கசிப்புக்கு ஓட்கா என்றும் ஜப்பானில் 'சேக்' என்றும் அவர் கூறினார். 

 நல்ல தரத்திற்கு கசிப்பு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தால், அந்த தொழிலில் இருந்து இந்த நாட்டுக்கு வரும் டொலர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்கிறார்.

 ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேவேளை, இந்த வருட இறுதிக்குள் 15 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

 இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக விசேட டாக்சி சங்கங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரங்களை 'தூங்கும் நகரங்களாக' மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!