இலங்கையில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் நபர் ஒருவர் கைது
#SriLanka
#Arrest
#Police
#Bomb
Prathees
2 years ago
ராகம பிரதேசத்தில் வீதியொன்றில் வைத்து இந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்றை தனது பயணப்பெட்டியில் வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொட்டுகொட ஓபட பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் ராகம சிறிவர்தன மாவத்தையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்டிருந்த நிலையில், குற்றத்தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
சந்தேக நபரை பிடித்து சோதனையிட்ட போது, அவர் வைத்திருந்த பையில் கைக்குண்டு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.