கடந்த எட்டு மாதத்தில் 19,000 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை அடகு வைத்த மக்கள்

#SriLanka #people #Gold
Prathees
1 year ago
கடந்த எட்டு மாதத்தில் 19,000 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை அடகு வைத்த மக்கள்

இந்த வருடத்தின் எட்டு மாத காலப்பகுதியில் இலங்கை மக்கள் 19,000 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை அடகு வைத்துள்ளதாக தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 வாழ முடியாத காரணத்தால் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மாற்று நாணயங்களை வங்கிக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்றார்.

 11 இலட்சம் குடும்பங்கள் தமது வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 மேலும், சமீபத்திய ஆய்வு அறிக்கையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

 இந்த நாட்டின் அனைத்து மக்களும் கடுமையான வாழ்க்கை நெருக்கடியை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியால் ஓரளவு நிவாரணம் பெறுவதற்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். 

 வழங்காவிட்டால் மீள முடியாத போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!