பொதுமக்கள் மணல் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட திட்டம் நடைமுறை

பொதுமக்கள் நியாயமான விலையில் இலகுவாக மணல் பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட திட்டம் நடைமுறை ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதன் அடிப்படையில், மணல் அகழ்வுக்காக அடையாளப்படுத்தப்பட்ட ஆற்றுப்பகுதியை அண்மித்த தனியார் அல்லது பொது காணியில் மணல் விற்பனைத் தளம் ஒன்றை அமைத்து முறையான கண்காணிப்பில் வழங்க முடியும் என ஆராயப்பட்டது.
இதற்கான முறையான அனுமதியை கனிய வளத் திணைக்களம் ஊடாக பெற்று, பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் மக்களுக்கு நியாயமான விலையில் கொடுக்க முடியும். இதற்கான முறையான செயற்பாடு விரைவில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கு மாறும்,
இதன் சாதக பாதக நிலை தொடர்பில் ஆராய்ந்து குறிப்பிடுமாறும் அமைச்சர் பணித்தார்.
இதன் மூலம், சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தவும், மக்களின் மணல் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நியாயமான விலைக்கு மணல் வழங்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.



