வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை அடையாளம் காணுமாறு சமுர்த்தி திணைக்களத்திற்கு உத்தரவு!

வறுமையால் பாதிக்கப்பட்ட ஏனைய குடும்பங்களை அடையாளம் காண கணக்கெடுப்பை நடத்துமாறு பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பதற்கான துறைசார் கண்காணிப்புக் குழு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது.
நிதி அமைச்சகம், நலன்புரிப் பலன்கள் வாரியம், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை ஆகியவை இணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்று குழு அறிவுறுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பதற்கான துறைசார் கண்காணிப்புக் குழு பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் கூடிய போதே மேற்படி பணிப்புரை விடுத்துள்ளது.
இதன்போது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் இல்லாத குடும்பங்களை வலுவூட்டும் பொறுப்பு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஐந்து வருடங்களில் வறுமை ஒழிப்புக்கான திட்டத்தை உடனடியாக தயாரிக்குமாறு சமுர்த்தி திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



