அவிசாவளை இரட்டைக் கொலையில் மன்னா ரமேஷின் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது!

#SriLanka #Arrest #Police #Crime
Prathees
1 year ago
அவிசாவளை இரட்டைக் கொலையில் மன்னா ரமேஷின் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது!

அவிசாவளை தல்துவ குருபாஸ்கொடவில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு இருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் பாதாள உலக தலைவர் மன்னா ரமேஷின் கும்பலைச் சேர்ந்த நால்வர் நேற்று (24) விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 சந்தேகநபர்களில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 நான்கு சந்தேக நபர்களில் மூவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தல்துவ நகர மையத்தில் மன்னா ரமேஷின் சகோதரர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் தொடர்பிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்த நான்கு சந்தேக நபர்களும் ஹோமாகம மற்றும் பிடிபன பிரதேசங்களில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தல்துவ இரட்டைக் கொலைக்கு வந்த இரு பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு அடைக்கலம் கொடுத்தமை, உதவி செய்தமை ஆகிய குற்றச்சாட்டின் பேரிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் மன்னா ரமேஷுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர் என்பதும், அவருக்கு மாதச் சம்பளம் கூட வழங்கியிருப்பதும் தெரியவந்ததாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 ஊடகவியலாளர் என்ற வகையில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் இந்த ஊடகவியலாளர், பல்வேறு தகவல்களைப் பெற்று மன்னா ரமேஷிடம் வழங்கியுள்ளதாகவும் அந்த உயர் அதிகாரி தெரிவித்தார்.

 படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் பயணங்கள் தொடர்பிலும் இந்த ஊடகவியலாளர் தகவல் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 இரட்டைக் கொலையின் பின்னர் கொலையாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்ற நபரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அடங்குவார்.

 இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கிய மன்னா ரமேஷ் தற்போது துபாய் மாநிலத்தில் பதுங்கி இருப்பதுடன் இரத்தினபுரி, அவிசாவளை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பணக்கார வர்த்தகர்களிடம் கப்பம் பெற்று வருவதும் தெரியவந்துள்ளது.

 தல்துவில் இரட்டைக் கொலையைச் செய்த பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் மூன்று விசேட பொலிஸ் குழுக்களும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 தல்துவ பிரதேசத்தில் இறுதிச் சடங்கு ஒன்றிற்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் அண்மையில் மன்னா ரமேஷின் கும்பலைச் சேர்ந்தவர்களினால் தாக்கப்பட்டதில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 

மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன, கேகாலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் ராஜபக்ஷ மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசிறி கொடித்துவக்கு ஆகியோரின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!