விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி அகழ்வு பணி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
விடுதலைப் புலிகள் அமைப்பினரினால் முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகளை அகழ்வதற்கான பணி ஆரம்பமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் குறித்த அகழ்வு பணிகள் இன்று (25.09) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் குறித்த அகழ்வு பணி நடைபெற்று வருகின்றது.