கல்கிஸ்ஸ பகுதியில் பொலிஸாரை தாக்கிய 6 பேர் கைது

கல்கிஸ்ஸ கரையோரப் பாதுகாப்புப் பிரிவில் பொலிஸ் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மீது தாக்குதல் நடத்திய 06 பேர், கல்கிஸ்ஸ பொலிஸ் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ கடற்கரையில் பாறைகள் நிறைந்த ஆபத்தான இடத்தில் குடிபோதையில் ஒரு குழு நீராடுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறை அதிகாரிகள் குழு அந்த இடத்திற்குச் சென்றது.
அப்போது, சம்பந்தப்பட்டவர்கள் ரவுடித்தனமாக நடந்து கொண்டதால், பரபரப்பு நிலவியதாக பொலிசார் தெரிவித்தனர்.
அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளை தாக்கினர்.
தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக அறிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரத்மலானை, பிலியந்தலை மற்றும் அஹுங்கல்ல ஆகிய பகுதிகளில் வசிக்கும் 16 முதல் 30 வயதுக்குட்பட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



