பல்பொருள் அங்காடிகளில் ஏதேனும் குற்றச்செயல் நடத்தால் காவல்துறைக்கு தெரிவிக்குமாறு வேண்டுகோள்!

பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஏதேனும் திருட்டு அல்லது பிற சட்டவிரோத செயல்கள் நடந்தால், பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் அந்த தரப்பினரைக் கட்டுப்படுத்தி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொருட்களை திருடிய குற்றத்திற்காக சட்டத்திற்கு மாறாக எவரையும் தாக்க முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவிதுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், உங்கள் நிறுவனத்தில் ஒரு பொருள் திருடப்படுவதைக் கண்டால், உங்களிடம் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளனர், குறிப்பாக அது ஒரு பல்பொருள் அங்காடியாக இருந்தால், அந்த நபரைக் கட்டுப்படுத்தி, காவல்துறைக்குத் தெரிவிக்கவும்.
ஆனால் தாக்குதல் மேற்கொள்வது, ஏற்றுக்கொள்ள முடியாதது. தாக்குதல் நடத்தப்பட்டால். , அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் சந்தேக நபர்களாக இருப்பார்கள். அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.அவர்கள் மீது சட்டம் அமுல்படுத்தப்படும். இந்த விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.



