இந்த நாட்டில் ஒரு குடும்பத்தின் கடன் சுமை ஐந்து இலட்சத்தை தாண்டும் - பொருளாதார ஆய்வாளர்
#SriLanka
#economy
#family
Prathees
2 years ago
இந்த வருடத்தில் இந்த நாட்டில் ஒரு குடும்பம் கிட்டத்தட்ட ஐந்து இலட்சத்து 20,000 ரூபா கடனாளிகளாக மாறியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், கடந்த ஏப்ரல் மாதம் பிறந்த குழந்தைக்காக அரசாங்கம் 12 இலட்சம் ரூபா கடனாகப் பெற்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
மேலும், நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு 47 இலட்சத்து 24,000 ரூபாவை அரசாங்கம் ஏற்கனவே கடனாகப் பெற்றுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் சுட்டிக்காட்டினார்.