வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மீள பெறுமாறு வலியுறுத்தல்!
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மத்திய குழு கூடி ஏகமனதாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு சட்டமூலங்களும் மனித சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை கடுமையாகப் பாதிப்பதால் அவற்றை நிறைவேற்றக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த இரண்டு சட்டமூலங்களுக்கும் எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்றையும் தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த இரண்டு சட்டமூலங்களின் உள்ளடக்கங்களும் சட்டமாக மாறினால் இந்நாட்டு மக்களின் உரிமைகள் முற்றாக நசுக்கப்படும். அதனால்தான் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாக தீர்மானம் எடுத்தது.
அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காக இந்த சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாம். இந்த சட்டமூலங்களை முன்வைப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இந்த விடயத்தை கையாள்வதற்கான அறிவு உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்த விடயத்தை கையாள்வதற்கும், இந்த விடயம் தொடர்பில் உரையாடலை உருவாக்குவதற்கும் அறிவுள்ள சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரதும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சட்டமூலத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.