பெரும் வாகன மோசடியை வெளிக்கொண்டு வந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்!
#SriLanka
#Police
Prathees
1 year ago

பல வருடங்களாக பல பாரிய வாகன மோசடிகள் தொடர்பான விபரங்களை வெளிக்கொண்டு வந்த பாணந்துறை வலன ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், சேவை தேவைகள் காரணமாகவே ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதுதான் கடந்த சில மாதங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய வாகனக் கடத்தலை வெளிக்கொணர முடிந்தது.
கடந்த காலங்களில், தந்தம் கடத்தல், ரத்தினக் கல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான கடத்தல்களை பிடிப்பதில் அவரது நடவடிக்கைகள் வெற்றிகரமாக இருந்தன.



