ஈஸ்டர் தாக்குதல் குறித்து சனல் -4 இப்போது உண்மையை வெளிப்படுத்துகிறது: மைத்திரி
#SriLanka
#Polonnaruwa
#Easter Sunday Attack
#Maithripala Sirisena
Prathees
2 years ago
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு வருடங்களாக துன்புறுத்திய போதிலும் தற்போது தான் உண்மை வெளிவருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சனல் ஃபோ வீடியோ மூலம் தாக்குதல் குறித்த தகவல்கள் தெரியவரும் என்றார்.
இன்னும் சில நாட்களில் பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தில் மிகக் கடுமையாகப் பேசுவேன் என்றும் அவர் கூறினார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சனல் ஃபோ அறிக்கை மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.