இலங்கைக்கான வானிலை முன்னறிவிப்புகளை வழங்க முடியாத ஒரு புதிரான சூழ்நிலை!

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் சர்வதேச வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்கள் ஆகிய இரண்டு நிறுவனங்களினாலும் , இலங்கைக்கான வானிலை முன்னறிவிப்புகளை வழங்க முடியாத ஒரு புதிரான சூழ்நிலை உருவாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை போன்ற சிறிய தீவுக்கான வானிலை முன்னறிவித்தல்களை கணிப்பதில் பாரிய சவால்கள் இருப்பதாக நேற்றைய தினம் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் சர்வதேச வானிலை முன்னறிவிப்பு நிறுவனங்கள் ஆகியவை ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குப் பின்னர் கடுமையான மழை பெய்யும் என்றும் ஒக்டோபர் வரை வறட்சி நிலவும் எனவும் முன்னறிவித்திருந்தன.
எனவே, விவசாயிகள் சவால்களை முன்னறிந்து கொண்டு, எதிர்காலத்தில் தங்கள் விவசாய நடவடிக்கைகளைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
"விவசாயிகள் தங்கள் விவசாய முயற்சிகளுக்கு சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அதிகாரம் அளிக்கும் ஒரு விரிவான திட்டத்தை நிறுவுவதில் ஒரு அமைச்சகமாக நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.
விவசாயிகளுக்கு ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும், ஆனால் பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலான விவசாயிகள் மிகவும் வயதானவர்களாக இருப்பதால் அவர்களால் தற்கால தொழில்நுட்பத்தை உள்வாங்க இயலாமல் இருப்பது ஒரு சவாலாக உள்ளது” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



