வவுனியாவில் மாயமான சிறுமியின் சடலத்தை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் அறிவிப்பு!

#SriLanka #Vavuniya #Lanka4 #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வவுனியாவில் மாயமான சிறுமியின் சடலத்தை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் அறிவிப்பு!

வவுனியா, இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் அம்மம்மாவான குணரட்னம் ரோகினி அறிவித்துள்ளார்.  

வவுனியா ஊடக அமையத்தில் நேற்று (19.09) ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பில் துண்டு பிரசுரம் ஒன்றும் அவரால் வெளியிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த 25.08.2023 ஆம் திகதியன்று வவுனியா,  பாரதிபுரம் பகுதியில் 2 வயது சிறுமி நீர்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தார். 

இறந்த சிறுமியின் உடல் இராசேந்திரங்குளம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த 05.09.2023 அன்று சிறுமியின் உடல் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.  

இது தொடர்டபான உண்மையான தகவல் தெரிந்தவர்கள் கீழ்கண்ட தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனவும் சிறுமியின் சடலத்தை எடுத்தவர்கள் மீள கையளிக்கின்ற போது 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறுமியின் சடலம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 076 - 6091158 அல்லது 075 - 4986953 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு தாயார் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதேவேளை  குறித்த சிறுமின் சடலத்தை காணவில்லை என நெளுக்குளம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!