ஆறு மாதங்களாக மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசி தட்டுப்பாடு

நாட்டில் பரவும் மஞ்சள் காமாலையைத் தடுப்பதற்கான தடுப்பூசி இல்லாதது குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, தடுப்பூசி கிடைக்காததால் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கருத்து தெரிவித்ததுடன், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் பதிலளித்தார்.
மஞ்சள் காமாலைக்கு பெறப்படும் தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாட்டில் இல்லை எனவும், தடுப்பூசியை இறக்குமதி செய்ய எந்தவொரு விநியோகஸ்தரும் முன்வரவில்லை எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அதன் காரணமாகவே சுகாதார அமைச்சு தலையிட்டு 2000 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு யுனிசெப் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



