அதிகாரிகள் பற்றாக்குறையால், மருத்துவமனைகளில் கதிரியக்க பரிசோதனை பணியும் நெருக்கடியில்

#SriLanka #Hospital
Prathees
2 years ago
அதிகாரிகள் பற்றாக்குறையால், மருத்துவமனைகளில் கதிரியக்க பரிசோதனை பணியும் நெருக்கடியில்

இந்த நாட்டில் அரச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கதிரியக்க பரிசோதனை சேவை தற்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அரசாங்கத்தின் கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க பரிசோதனை சேவைகள் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக அதன் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். 

அந்த சேவை தொடர்பான அதிகாரிகள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 சுகாதார சேவையாளர்களின் பற்றாக்குறையினால் இலங்கையில் உள்ள பல முக்கிய வைத்தியசாலைகளின் சேவைகள் எதிர்காலத்தில் நெருக்கடிக்கு உள்ளாகும் என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ஷனக தர்மவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4