இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#weather
#Lanka4
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (17.09) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யும் எனவும் இடியுடன் கூடிய மழை மற்றும் தற்காலிக பலத்த காற்று ஆகியவற்றால் ஏற்படும் சேதங்களை குறைத்துக்கொள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.



