மாணவர்கள் பட்டப்படிப்பை நோக்கி செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை!

#SriLanka #Dinesh Gunawardena #Lanka4 #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மாணவர்கள் பட்டப்படிப்பை நோக்கி செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை!

ஒரு வருடத்திற்கு முன்னர் மாணவர்கள் பட்டப்படிப்பை நோக்கிச் செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம்  கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேற்படி தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “குழந்தைகள் சரியான நேரத்தில் தேர்வுகள், சரியான நேரத்தில் முடிவுகள், உயர்கல்விக்கான கதவுகள் சரியான நேரத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

எனவே, இந்த அட்டவணையை உறுதியுடன் செயல்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. குழந்தைகள் பட்டப்படிப்புக்கான நேரத்தை ஒரு வருடத்திற்கு முன்பே குறைப்பது குறித்து விவாதித்தோம். எதிர்காலத்தில் அந்த சவாலை நாம் வெல்ல வேண்டும்” என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!