கஞ்சாவுடன் பிக்கு ஒருவர் கைது
#SriLanka
#Arrest
#Anuradapura
#Cannabis
Prathees
1 year ago

150 கிராம் கஞ்சாவுடன் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓயாமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் ஓயாமடுவ பண்டாரகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து இந்த பிக்கு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காவற்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விகாரையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



