அலி சப்ரி ரஹீம் மீது மற்றுமோர் குற்றச்சாட்டு!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்துக்குச் சொந்தமான 214 ஏக்கர் காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக அனுபவித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த காணியை தனியார் நிறுவனம் ஒன்று உப்பு உற்பத்திக்காக பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் சுமார் 14 வருடங்களாக இந்தக் காணியிலிருந்து அரசாங்கத்துக்கு வரி செலுத்தப்படாமையால் சுமார் 20 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.