சர்வதேச நாணயநிதியத்தின் குழுவினர் இலங்கை வருகை!

#SriLanka #Sri Lanka President #IMF #Tamilnews #sri lanka tamil news #money
Mayoorikka
1 year ago
சர்வதேச நாணயநிதியத்தின் குழுவினர் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு இன்று (13) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த குழுவினர் நாளை இலங்கை அதிகாரிகள் குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன், குறித்த அதிகாரிகள் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை தமது மீளாய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 கடந்த மார்ச் மாதம், இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புகளுக்கு ஆதரவாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர், விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி அளித்தது.

 இந்த ஆதரவு திட்டம் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல், வறிய மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான பொருளாதார தாக்கத்தை குறைத்தல், நிதித்துறை ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் நிர்வாக மற்றும் வளர்ச்சி திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 இதனிடையே, தாம் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மற்றுமொரு மோசடிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வெளியான செய்தியை முற்றாக நிராகரிப்பதாக முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

 2007 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சர்வதேச இறையாண்மை பத்திர விவகாரங்கள் மற்றும் அவற்றின் தீர்வு தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் தாம் முழுமையாக ஆதரவளிப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!