ரயில் நிலையங்களில் இராணுவத்தினரை களமிறக்க தீர்மானம்!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேவைப்பட்டால் ஏனைய புகையிரத நிலையங்களுக்கும் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை ஈடுபடுத்த முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரயில்வே துணைப் பொது மேலாளர் இண்டிபோலகே, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உதவியாக இராணுவத்தை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
புகையிரதத்தை இயக்குவதற்கு ஒன்றிணைந்த புகையிரத சாரதிகள் மற்றும் நிலைய அதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.