ரயில் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு : இளைஞர் பலி!
#SriLanka
#Railway
#Lanka4
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பல ரயில் சேவைகள் இரத்த செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெரும் அவதிகுள்ளான பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட ரயில்களில் பயணங்களை மேற்கொண்டனர்.
இதன்காரணமாக வழமைக்கு மாறாக ரயில்களில் அதிகளவிலான பயணிகள் ஏரியுள்ளனர். இந்நிலையில், ஹேரேப் நிலையத்திற்கு அருகில் ரயிலின் மேற்கூறையில் பயணித்த நபர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



