தனது மகளுடன் ரயில் முன் பாய்ந்த தந்தை - கந்தளாய் பகுதியில் சம்பவம்!
#SriLanka
#Tamil
#Lanka4
#Tamilnews
Thamilini
2 years ago
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட ராஜஎல பிரதேசத்திற்கு உற்பட்ட பகுதியில் தனது மகளுடன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தில் வீழ்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளே பேராறு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரும், 6 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.