இலங்கையில் 3 ரூபாவை குறைத்து எரிபொருளை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ள சீனா
#SriLanka
#China
#petrol
Prathees
2 years ago
சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிவாயு நிலையம் மத்தேகொட பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டு எரிபொருள் விற்பனை தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிபெட்கோ மற்றும் சதக் நிரப்பு நிலையங்களில் விற்பனையாகும் எரிபொருள் விலையை விட சினோபெக் எரிபொருள் விற்பனை நிலையங்கள் ஊடாக 03 ரூபா குறைத்து பெற்றோல் மற்றும் டீசலை கொள்வனவு செய்ய முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் சினோபெக் நிறுவனம் அண்மையில் இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
அதன்படி, வரும் ஒக்டோபருக்குள் 150 நிரப்பு நிலையங்களின் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.