குருவாயூர் கோவிலில் திருவோண பண்டிகைக்கு முன்னால் இல்லம் நிரப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது

#India #2023 #Tamilnews #Kerala
Mani
8 months ago
குருவாயூர் கோவிலில் திருவோண பண்டிகைக்கு முன்னால் இல்லம் நிரப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் திருவோண பண்டிகைக்கு முன்னோடியாக இல்லம் நிரப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்காக 1200 நெற்கதிர் கட்டுகள் கொண்டுவரப்பட்டன. அந்த கட்டில் இருந்து ஒரு கைப்பிடி அளவு நெற்கதிர் எடுத்து பட்டு துணியில் கட்டி குருவாயூரப்பனின் பாதத்தில் சமர்பித்து ஐஸ்வரிய பூஜை மற்றும் லட்சுமி பூஜை ஆகியவை செய்யப்பட்டன.

பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.