சிறுவாபுரி முருகன் கோவிலில் சிறப்பாக வருஷாபிஷேக விழா

#India #Temple #spiritual #2023 #Tamilnews
Mani
3 months ago
சிறுவாபுரி முருகன் கோவிலில் சிறப்பாக வருஷாபிஷேக விழா

சோழவரம் ஒன்றியம், ஆரணியை அடுத்த சிறுவாபுரி கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.மேலும், கோவிலில் நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது.

நேற்று காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து, முருகப்பெருமானுக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் கலசங்கள் சாத்தப்பட்டு மகாபூர்ணாகுதி நடைபெற்றது. இதன் பின்னர், புனித நீர் அடங்கிய கலசங்களை ஊர்வலமாக கொண்டு வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்தனர்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு