மோல்டா தீவில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதா? - அநுர விளக்கம்!
மோல்டா தீவில் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சில தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு அந்த நபர்களுக்கு சவால் விடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், "நாங்கள் மோல்டாதீவில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக ஒருவர் கூறுகிறார். எங்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் கட்சியினர் யாரும் பொதுமக்களின் பணத்தை திருடவில்லை. இந்த நாட்டில் அது நடக்காது. ஒரு நாள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ என்னிடம் பாராளுமன்றத்தில் மோசடி செய்பவர்களை, ஊழல்வாதிகளை தண்டிக்க எனக்கு அதிகாரம் உண்டு என்று கூறினார்.
அந்த அதிகாரம் என்னிடம் இருந்தால் முன்வரிசையில் பலர் தண்டிக்கப்பட்டிருப்பார்கள் என்றுக் கூறினேன். நாம் சேறும், அவதூறும் ஊசலாடும் அரசியல் இயக்கம் அல்ல.
இலங்கையில் சமீபகாலமாக இப்படியான அரசியல் பிளவு, காலப்போக்கில் நடக்கவில்லை. வெவ்வேறு பிளவுகளை உருவாக்கி, ஒருவரையொருவர் நசுக்கும் நாட்டை உருவாக்கினார்கள்.
முதல்முறையாக ஊழல்வாதிகளுக்கு எதிராக சாமானிய மக்களின் ஒற்றுமையுடன் கூடிய ஒரு இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.